மட்/புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய விளையாட்டு மைதான புனரமைப்பு (04.04.2022)

கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைப்பு செய்யும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பயணத்தின் தொடர்ச்சியாக   மட்டக்களப்பு  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் முன்மொழிவிற்கமைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பல விளையாட்டு மைதானங்களுக்கான புனரமைப்பு பணிகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்தவகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  மட்/புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய மைதானம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.  குறித்த நிகழ்வானது நேற்றைய (04.04.2022) தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் ஜோர்ஜ் பிள்ளை, சாரதா தேவி, குமார் ,உதவிக் கல்விப் பணிப்பாளர், மட்/புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர், மண்முனை வடக்கு அமைப்பாளர் குமாரசாமி கந்தராஜா  மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொண்டர்கள் ஆதரவாளர்கள் நலன்விரும்பிகள் உறுப்பினர்களிடமிர

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பரந்து பட்ட செயற்பாடுகளால் கட்சி மீதும் கட்சி தலைம

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்களுடனான விசேட கலந்துரையாட