மண்முனைப்பற்று மாவிலங்கு துறை பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கு துறை பிரதேசத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான கெளரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கினை மண்முனைப்பற்று பிரதேச செயலகம்  மற்றும் ஆற்றல் பேரவை இணைந்து ஏற்பாடுசெய்திருந்தது. இதன்போது அதிகரித்துவரும்  போதைப் பொருள் பாவனையை குறைப்பது தொடர்பாகவும், இளைஞர் சமுதாயத்தை அதிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பிரதேச செயலாளர் திரு சத்தியானந்தன்,காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி சுசிலா, மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலை

Video

சுடர் ஒளி விளையாட்டு கழகத்தின் கொம்மாதுறை பிரிமியர் லீக் (KPL) 2024 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நி

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான