சுபீட்சத்தின் நோக்கு நாடு பூராகவும் 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம்

அண்மையில் அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு நாடு பூராகவும் 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கான 200 தென்னங்கன்றுகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி திருமதி. மங்களேஸ்வரி சங்கர் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் போரதீவுபற்று பிரதேச அமைப்பாளர் திரு. தயாபரன் தலைமையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது இந் நிகழ்வின் போது தென்னை அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரி ராஜபக்ஷ மற்றும் கிரமசேவகர் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலை

Video

சுடர் ஒளி விளையாட்டு கழகத்தின் கொம்மாதுறை பிரிமியர் லீக் (KPL) 2024 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நி

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான